நேற்று காலை வராக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஞானபிரான் ஸ்ரீதேவி – பூதேவியுடன் பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகள் வழியாக திருவீதியுலா வந்தார். இதனை தொடர்ந்து, காலை 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் திருப்பாவை சாற்று முறையும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது. இரவு, ஞானபிரான் ஸ்ரீதேவி – பூதேவியுடன் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி 4 ராஜ வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். வழி நெடுகிலும், பக்தர்கள் கற்பூரம் எற்றி ஞானபிரானை வணங்கினர்.
The post ஆதிவராக பெருமாள் கோயில் ஜெயந்தி விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.