பவானி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

மேட்டுப்பாளையம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரிதுரை (45). இவரது மனைவி முத்துலட்சுமி (40). தம்பதிக்கு அபினேஷ்குமார் (10), அவினேஷ்குமார் (8) உள்ளிட்ட இரு மகன்கள் உள்ளனர். இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டு மற்றும் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை திம்மராயம்பாளையத்தில் வசித்து வரும் பாட்டி லிங்கம்மாள் (75) என்பவர் தனது பேரன்களை நேற்று காலை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மதியம் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பாட்டி மற்றும் பேரன்கள் அபினேஷ், குமார், அவினேஷ் குமார் உள்ளிட்டோருடன் அப்பகுதியில் உள்ள பவானி ஆற்றிற்கு சென்று துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது, அபினேஷ் குமாரும், அவினேஷ் குமாரும் ஆற்றில் குளித்து உள்ளனர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post பவானி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: