ஆக்ரோஷமாக காரை விரட்டிய பாகுபலி யானை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் நேற்று அதிகாலை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தண்ணீர் அருந்திய பாகுபலி யானை சமயபுரம் வழியாக சாலையை கடக்க முயன்றது. அப்போது யானை வருவதை கண்ட காரில் இருந்த பயணிகள் காரை நிறுத்தி யானை வருவதை பார்த்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக பாகுபலி யானை ஆக்ரோஷமாக காரை விரட்டியது. நல்வாய்ப்பாக காரின் டிரைவர் காரை முன்னோக்கி இயக்கி சென்றதால் உயிர் தப்பினர். தொடர்ந்து யானை மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் பிரதான சாலையில் கம்பீரமாக நடந்து சென்றது. அப்போது, கன்றுக்குட்டி ஒன்று யானையை பார்த்துக்கொண்டே சென்றபோது சற்று நேரம் நின்று அதனை ஒரு முறை முறைத்துவிட்டு மீண்டும் நெல்லிமலை வனப்பகுதிக்குள் சாவகாசமாக நடந்து சென்றது. இதனால் சமயபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆக்ரோஷமாக காரை விரட்டிய பாகுபலி யானை appeared first on Dinakaran.

Related Stories: