பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளரக்கூடாது: ஜி.கே.வாசன் அறிவுரை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94.56 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனம் தளரக்கூடாது. தொடர்ந்து நடைபெற இருக்கும் தேர்வில் பங்கேற்று, நன்கு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்படிப்பில் சேர்ந்து நன்கு கல்வி கற்று, வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளரக்கூடாது: ஜி.கே.வாசன் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: