குடிநீர் விநியோகம்: ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

சென்னை: தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக 19 மாவட்டஆசியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். குடிநீர் விநியோகம், தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசிக்கிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் 19 ஆட்சியர்களுடன் ஷிவ்தாஸ் மீனா ஆலோசிக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 19 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கவுள்ளனர். இன்று 19 ஆட்சியர்களுடன் ஆலோசிக்கும் நிலையில் நாளை மீதமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை. மக்களுடன் முதல்வர், கல்லூரி கனவு ஆகிய திட்டங்களின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

The post குடிநீர் விநியோகம்: ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: