இறைவன் இந்த உலகைத் தாங்குகிறார். அந்த இறைவனையே தாங்குவது அவருடைய பாதங்கள். அதனால் பாதத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். திருவள்ளுவரே கடவுள் வாழ்த்தில் இறைவனுடைய பாதத்தைத்தான்,“நல் தாள்”, “மா அடி”,” இறைவனடி” என்று பாதத்தை மட்டுமே பணிகிறார். இறைவனின் பாத கமலத்தைப் பற்றிக்கொண்டால், நம்முடைய பாதக மலம் அகலும் என்பார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். கடவுள்களில் ஒவ்வொரு கடவுள்களுக்கும் கைகளின் எண்ணிக்கையும் தலைகளின் எண்ணிக்கையும் மாறுபடும்.
ஆனால், பாதம் இரண்டு மட்டுமே இருக்கும்.நான்கு முகம்கொண்ட பிரம்மனுக்கு எட்டுக் கால்களும் ஐந்து முகம் கொண்ட சிவபெருமானுக்குப் பத்து கால்களும் ஆறு முகம் கொண்ட முருகப்பெருமானுக்குப் பன்னிரு கால்களும் இருப்பதில்லை. கடவுளுக்குக் கணக்குத் தெரியவில்லையா? என்று எண்ணவேண்டாம். கடவுளுக்குக் கருணை அதிகம். இதுதான் பற்றுக்கோடு என்று பற்றிக்கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு கைகள் என்பதால் இரு கால்களுடன் அருள்கிறார்.இறைவன் எல்லாவற்றையும் தருவார். அவரது பாதமோ இறைவனையே நமக்குத் தரும்.
The post பாத தரிசனத்தின் பலன் என்ன? appeared first on Dinakaran.