எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை

 

சென்னை, மே 5: பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கற்பகம் (50). இவர்களது மகன் நவீன், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கூடுவாஞ்சேரி கிராமத்தில் இருந்து பொன்னேரி டவுனுக்கு குடியேறிவிடலாம் என்று தாய் கற்பகத்திடம் கூறி வந்துள்ளார். இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்து இந்த வீட்டில் இருந்து வரமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நவீன் மற்றும் அவரது தாய் கற்பகம் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கற்பகம் திடீரென்று மாயமானார். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள குளக்கரையில், உடல் முழுவதும் எரிந்த நிலையில் கற்பகம் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கற்பகம் எரித்து கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: