பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி!

டெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்ததால் ஏற்பட்ட அதிருப்தியில் காங்கிரஸில் இருந்து விலகினார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இணைந்தார்.

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அரவிந்தர் சிங் லவ்லி கடந்த மாதம் 28ம் தேதி ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு கடிதம் அனுப்பினார்.

அதில், ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு டெல்லி காங்கிரஸ் பிரிவு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் டெல்லி மேலிட தலைவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்து ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இணைந்தார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவ், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி! appeared first on Dinakaran.

Related Stories: