இந்தியாவில், பெருநகரங்கள் அல்லாமல் மற்ற இடங்களில் வசிக்கும் சாமானிய மக்களும் அதிக ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். நாங்கள் ஏன் 28 சதவீத ஜிஎஸ்டியை செலுத்த வேண்டும்? ஆசியான் நாடுகள், லத்தீன் அமெரிக்கா, பிரேசில் நாடுகளில் 8-14 சதவீத ஜிஎஸ்டிதான் விதிக்கிறார்கள். இந்தியாவில் ஜிஎஸ்டி மிகவும் அதிகமாக உள்ளது. 18 சதவீத ஜிஎஸ்டி யை நிர்ணயிக்கலாம். அரசு இது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். 28 சதவீத வரி கூடவே கூடாது. இந்தியாவில் 12 முதல் 14 குதிரைத்திறனை மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய 150 சிசி மோட்டார் சைக்கிளுக்கு கூட ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது நியாயமா? டூவீலர்கள் விற்பனை கொரோனா காலத்துக்கு முந்தைய அளவை இன்னும் எட்டவில்லை. இவ்வாறு ராஜீவ் பஜாஜ் பேசினார்.
The post கட்டுப்பாடுகளால் வாகன விலை 2 மடங்கு உயர்வு 28 சதவீத ஜிஎஸ்டியை நாங்கள் ஏன் தர வேண்டும்? ராஜீவ் பஜாஜ் காட்டம் appeared first on Dinakaran.