6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் 3ம் பருவத்தின் தொகுதி 2வது புத்தகத்தில் இயல் 2ல் முழுக்கள் எனும் தலைப்பில் ஆன பாடம் இடம்பெற்றுள்ளது. கணிதத்தில் முழுக்கள் குறித்து உவமையுடன் நடத்த பல்வேறு வழிமுறைகள் இருந்தும் சீட்டுக்கட்டு முறையை மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஏற்புடையது அல்ல.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை அரசே தடை செய்திருந்தது. இத்தகைய சூழலில் மாணவர் பருவத்திலேயே சீட்டு கட்டு விளையாட்டு குறித்தும் அதன் விளையாட்டு உத்தி குறித்தும் விரிவாக பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்திருப்பது ஏற்புடையது அல்ல. 10ம் வகுப்பு கணக்கு பாடத்திலும் இது போன்ற பாடங்கள் இருந்தன. அதனை கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை நீக்கியது. எனவே மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பாடத்தை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

The post 6ம் வகுப்பு கணக்கு பாடத்தில் சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை நீக்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: