சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின்போது, வாட்ஸ் அப் குழு மூலம் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 கிராம் மெத்தப்பிட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், திருவல்லிகேணியை சேர்ந்த சுல்தான் என்பவர் மூலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்ததும், அக்குழுவில் ராகுல் என்பவர் அடிக்கடி போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அதில் அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. இந்த குழுவில் மேலும் யார் யார் இருக்கிறார்கள்?, முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: