அதிகாலை 5 மணிக்கு அவர் கண்ட கனவானது அவரைத் திடுக்கிட வைத்தது. அன்று காலையில் வழக்கம்போல் தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு கரையில் நின்று சிவனை வணங்கி நின்றார். அந்நேரம் ஓர் அசரீரி ஒலித்தது.‘‘சோமசுந்தரம் நான் உள்ளே தானப்பா இருக்கிறேன்’’ என்றது.மனம் நொந்த சோமசுந்தரர் ‘‘நீர் உள்ளே இருப்பதை நான் எவ்வாறு அறிவேன்’’ என்று கூறினார்.உடனே…? ‘‘நீ ஆற்றுக்குள் இறங்கி வா.!’’‘‘நான் மேலே வந்து உனக்கு காட்சி கொடுக்கிறேன்’’ என்று கூறினார் விநாயகர்.சோமசுந்தரர் ஊருக்குச் சென்று மக்களைத் திரட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்கு வந்தார். இவர்கள் அனைவரும் ஆற்றுக்குள் இறங்க விநாயகர் சிலையானது இருக்குமிடத்தின் சூழலை காண்பித்து கொடுத்தது. வானத்தின் மேல் கருடன் வட்டமிட விநாயகர் மேலெழும்பி வந்தார். தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து விநாயகரை கரையில் வைத்து பார்த்தபோது விநாயகர் சிலையானது பின்னப்பட்டிருந்தது (சேதப்படுத்தப்பட்டிருந்தது) அவருடன் வந்த ஊர்மக்கள் சிலையைப் பார்த்ததும் ஏளனமாக பேசத் தொடங்கினர்.
மனம் நொந்தார் சோமசுந்தரர். ‘‘இறைவா, இது உன் சோதனையா’’ என்று அழுதார் அந்தத் தாமிரபரணி நதிக்கரையில்… அவர் அருகில் இருந்த அவரது மனைவியார். சுவாமி நமக்கு இதேபோல் ஊனமுற்ற ஒரு குழந்தை பிறந்தால் நாம் என்ன செய்வோம்? அதை அரவணைப்போடு வளர்க்கத்தானே செய்வோம். அதேபோல், இந்த சிலையை வைத்து நாம் வணங்குவோம் என்று கூறினார். உடனேயே சோமசுந்தரர் ஆற்றங்கரையில் ஒரு அரச மரத்தடியில் அந்த விநாயகரை பிரதிஷ்டை செய்தார். சோமசுந்தரர் கையினால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், இவ்விநாயகர் இன்று சோமசுந்தர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். போக்குவரத்து அதிகமாக இல்லாத காலகட்டத்தில் ஆற்றைக் கடந்துதான்… பாளையங்கோட்டைக்கு செல்ல வேண்டும். அருகன்குளத்தைச் சேர்ந்த ஒருவர் பாளையங்கோட்டையில் இருந்து. அருகன் குளம் வரும்போது அவர் கையில் நிறைய பணம் இருந்தது அதைக் கண்ட திருடர்கள் அவரை கொன்று விட்டு அந்த பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைத்தனர்.
கயவர்கள் விரட்ட மனம் பதறிய அந்த நபர் ஆற்றில் இறங்கினார். ஆற்றுக்குள் இறங்கியவுடன் அவர் கண்ணில் தென்பட்டார் சோமசுந்தர விநாயகர்.‘‘ஐந்து கரத்தோனே என்னை ஆட்கொள்ளப்பா’’ என்ற அபயக் குரல் கொடுத்தார்.கஜமுக நாதன் மதயானை ரூபம் கொண்டு அந்தத்திருடர்களை பயமுறுத்த திருடர்கள் அஞ்சி ஓடினர்.ஆற்றின் படித்துறையிலிருந்து வெளியே வந்த அந்த நபர், தன் கையில் இருந்த பணத்தை விநாயகர் முன்வைத்தார். உடனே அவ்வழியே வந்த சிறுவன், அந்த நபரை நோக்கி மழையில் நனைந்து இருக்கேன் எனக்கு ஒரு கொட்டகை போட்டு கொடுப்பா என்று கூறினான். சில நிமிடங்களில் அச்சிறுவன் அவ்விடம்விட்டுக் அகன்றான்.சிறுவன் வடிவில் சோமசுந்தரம் விநாயகர்தான் வந்து கூறுகிறார் என்று எண்ணிய அந்த நபர் விநாயகப் பெருமானுக்கு ஒரு கொட்டகை போட்டுக் கொடுத்தார்.இக்கோயிலில் அதிகமாக நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தாமிரபரணி புஷ்கர விழாவின்போது இக்கோயிலில் தாமிரபரணி அன்னை, அகத்திய முனிவர் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.நெல்லையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். நெல்லை சந்திப்பில் இருந்தும் தாழையூத்து சங்கர்நகரில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளன.
The post சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர் appeared first on Dinakaran.