சென்னை: மீஞ்சூர் அருகே நேற்று ஏரியில் குளிக்கச் சென்று மூழ்கி இறந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. நண்பர்களுடன் நேற்று வெல்லம்பாக்கம் ஏரியில் குளித்த கிரண்சிங்(22) நீரில் மூழ்கி காணாமல் போனார். ரப்பர் படகுகள் உதவியுடன் ஏரியில் மூழ்கி இறந்த கிரண்சிங் உடலை தீயணைப்புத்துறையினர் இன்று மீட்டனர்.