இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி வக்கீல்கள் அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி டெல்லி ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
The post தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட் appeared first on Dinakaran.