போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தவும், வாக்குமூலம் பதிவு செய்யவும் அனுமதிக்கக்கோரி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. திகார் சிறைக்குச் சென்று 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
The post ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் appeared first on Dinakaran.