சிவகாசியில் ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

 

சிவகாசி, மே 1: சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி பகுதியில் இயங்கி வரும் டிரான்ஸ்போர்ட்டுகளில் சிலர் உரிய அனுமதியின்றி நடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சிவகாசி கிழக்கு சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது சிவகாசி -சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு குடோனில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அந்த பட்டாசுகளை அனுப்ப உரிய அனுமதி இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்தனர். இதில் உரிய அனுமதி இல்லாமல் பல ஆண்டுகளாக பட்டாசுகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த குடோனுக்கு போலீசார் சீல் வைத்து உரிமையாளர் அனுப்பன்குளம் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் கணேசன்(45) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post சிவகாசியில் ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: