மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

 

ராமநாதபுரம், மே1: ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநில மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி அறுக்கப்படும் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரண்மனை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராமலெட்சுமி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் தாலியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இதில் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

The post மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: