வீட்டின் பூட்டை உடைத்து ரூ1 லட்சம், 15 கிலோ வெண்கலம் திருட்டு

சென்னை: தி.நகர் சாரதி தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (67). இவர், தனது குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி பெங்களூருவில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக சென்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ1 லட்சம் ரொக்கம் மற்றும் 15 கிலோ மதிப்புள்ள வெண்கல பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. புகாரின் பேரில், பாண்டி பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து ரூ1 லட்சம், 15 கிலோ வெண்கலம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: