வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் சிக்கினர்

பெரம்பூர்: எம்கேபி நகர் 19வது தெருவை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் பால சண்முகம் (59), நேற்று அதிகாலை முல்லை நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரை தாக்கி, செல்போன் மற்றும் மணிபர்ஸ், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை 2 பேர் பறித்து சென்றனர். புகாரின் பேரில், எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 15 மற்றும் 16 வயது சிறுவன் என தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

The post வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: