அப்போது எதிரே, விநாயகபுரம் பகுதியில் இருந்து காயிதே மில்லத் கல்லூரி வரை செல்லும் தடம் எண் 29 என்ற மாநகர பஸ் வந்தது. இரண்டும் நேருக்கு நேர் மோதியது. இதில், வேம்பு விஷ்வா தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அலறி துடித்தார். பைக் நொறுங்கியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேம்பு விஷ்வாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேம்பு விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த மாதவரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (52) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு appeared first on Dinakaran.