இந்நிலையில் கடும் வெயில் காரணமாக பொதுமக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது. அதில், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். வெப்பம் அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் வெளியே தேவை இல்லாமல் வர வேண்டாம். மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் பருகுவது நன்று. ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
The post கடும் வெயில்.. சென்னை மக்கள் வெளியே தேவை இல்லாமல் வர வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.