தேனி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சி!

தேனி: தேனி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார். தேனி கம்மவார் சங்கம் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பையும் மீறி இளைஞர் இருசக்கர வாகனத்தில் நுழைய முயற்சி. சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ராஜேஷ், வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் நுழைய முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தியபோது தகாத வார்த்தைகளால் அவர்களை இளைஞர் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.

 

The post தேனி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சி! appeared first on Dinakaran.

Related Stories: