அப்போது நடிகை ராதா மற்றும் அவரது தாய் பவானி, மகன் தருண் மற்றும் 3 பேர் அங்கு வந்துள்ளனர். வெகு நேரம் பணம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதும், நடிகை ராதா, அவரது தாய் பவானி, மகன் தருண் ஆகியோர் முரளி கிருஷ்ணனை கீழே தள்ளி சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர். இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் மூன்று தையல் போடப்பட்டது. இதுகுறித்து முரளி கிருஷ்ணன் வடபழனி காவல் நிலையத்தில் பிட் காயின் முதலீடு தொடர்பாக தன்னை நடிகை ராதா மற்றும் அவரது தாய், மகன் ஆகியோர் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். அதன்படி வடபழனி போலீசார் நடிகை ராதா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.