அதன் பேரில் செங்கல்பட்டு மாவட்ட உதவி தீயணைப்புதுறை அலுவலர் கிருஷ்ணமூரத்தி தலைமையில் தீயணைப்புதுறை வீரர்கள் மணிமாறன் வீட்டிற்குச் சென்று சமையல் அறையில் இருந்த 4 அடி நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டுச் சென்றனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பாம்பு உள்ளிட்ட பல விலங்குகள் தண்ணீரைத் தேடி குடியிருப்புகளுக்குள் வருவது அதிகமாக இருக்கும். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்புதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வீட்டு சமையலறைக்குள் புகுந்த நல்ல பாம்பு: வனப்பகுதியில் விடப்பட்டது appeared first on Dinakaran.