தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாம். தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்தும் மக்கள் வாக்களிக்கவில்லை. நீலகிரி ஸ்டிராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமரின் வார்த்தை ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனிக்கப்படக்கூடியவை. அதனால் அவர் கவனமாக பேச வேண்டும். பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலை இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல் பதிவிலும் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேச வேண்டும்: தேமுதிக பொதுச் செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.