தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்: கட்சியினருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று கட்சியினருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ மாவட்ட தலைவர், நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தலை அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்ப்பது வழக்கம். இந்த ஆண்டு கோடைகால வெளியில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் கட்சியினர் தங்களின் பகுதிகளில் உள்ள இடத்தில் நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க உதவ வேண்டும். மேலும் நீர் மோர் பந்தலை தினமும் காலை மாலை என இருமுறை நேரடி ஆய்வு செய்து, சுகாதாரத்தையும், தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்: கட்சியினருக்கு ஜவாஹிருல்லா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: