கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவராக டி.கே.சிவக்குமார் இருந்ததால், அவரது தலைமையில்தான் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றது என்று கூறப்பட்டது. அதனால் அவர் முதல்வர் பதவிக்கு உரிமை கோரினார். இருப்பினும், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சித்தராமையாவை முதல்வராக்கியது. டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தி அவரை மாநில துணை முதல்வராக நியமித்தது. இந்த நிலையில், தற்போது டி.கே.சிவக்குமாரின் பேச்சு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு appeared first on Dinakaran.