பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது செய்யபட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து முன்னாள் மாணவி புகார் அளித்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு பின் கைது செய்துள்ளனர்.

1995-2007ஆம் காலக்கட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் மேற்படி அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, பிப்ரவரி 2024-ல் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மேற்படி ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய எதிரியான ஷீஜித் கிருஷ்ணா, 51 வயது, த/பெ.பாலகிருஷ்ணன், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, சென்னை என்பவர் 22.04.2024 அன்று கைது செய்யப்பட்டார். மேற்படி எதிரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 22.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

The post பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது! appeared first on Dinakaran.

Related Stories: