லைகா, நடிகர் விஷால் இடையே நடந்த பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்..!!

சென்னை: லைகா, நடிகர் விஷால் இடையே நடந்த பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்த அறிக்கையை நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21.29 கோடி கடனை நடிகர் விஷால் வாங்கியுள்ளார் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. கடனை தங்கள் நிறுவனம் திருப்பிச் செலுத்திய நிலையில் விஷால் ரூ.21.29 கோடியை திருப்பித் தரவில்லை என லைகா புகார் தெரிவித்திருந்தது. ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என விஷால் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

The post லைகா, நடிகர் விஷால் இடையே நடந்த பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: