குறிப்பாக கார்த்திகை மற்றும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்தாண்டிற்கான சித்ரா பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,820 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
The post சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.