நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியக்கூடிய நீதிபதிகள் மீது சில புகார்கள் வந்ததையடுத்து, அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களுடன் நெருக்கமாக இருப்பதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும்.

தேவையின்றி வழக்கறிஞர், சங்க நிர்வாகிகளுடன் செல்போனில், சேம்பரில் பேசுவதை நீதிபதிகள் தவிர்க்கவும். பொதுமக்களின் பார்வையில் உள்ளோம் என்று எப்போதும் விழிப்புடன் நீதிபதிகள் இருக்க வேண்டும். பாரபட்சமற்ற நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டும் என்று தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு, நெறிமுறைகளை கடைபிடிக்காவிடில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என தலைமை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: