சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல்..!!

சென்னை: சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் கிரஷரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளிக்கரணை 200 அடி ரோடு ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி மணல் விற்பனை செய்யும் நிலையம் உள்ளது. அதிமுக பிரமுகர் லிங்கராஜுக்கு சொந்தமான ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் உள்ள லிங்கராஜ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: