ஆவடி அருகே அடகுக் கடையில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை போன விவகாரம்: ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை

சென்னை: ஆவடி அருகே அடகுக் கடையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணம் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக தப்பியோடிய கொள்ளையர்களைப் பிடிக்க ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். கடை உரிமையாளரின் போனை கொள்ளையர்கள் எடுத்து சென்றதால் அதன் மூலமாக துப்புத்துலக்க செல்போன் டவர்களில் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதலாக 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. எண்ணூர் மற்றும் பொன்னேரி பகுதிகளில் ரிவர்ஸ் முறையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியிலும் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

The post ஆவடி அருகே அடகுக் கடையில் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை போன விவகாரம்: ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: