புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கால் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து கல்லூரி மாணவர் இறங்க முயன்ற போது கால் தவறி விழுந்து உயிரிழந்தார். புதுச்சேரி தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் அபிஷேக். இவரது தந்தை கூலி தொழிலாளி இவரது ஒரே மகன் அபிஷேக். தாகூர் அரசு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகின்றார். இவர் கல்லூரி முடித்து தனியார் பேருந்தில் வீட்டிற்கு செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே பெரிய கடை சந்து என்ற பகுதியில் பேருந்து நின்றது.

ஆனால், அங்கு அவர் பேருந்திலிருந்து இறங்காமல் அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது ஓடிக்கொண்டிருக்கும் பேருந்திலிருந்து இறங்கியபோது அவர் நிலைதடுமாறி பின் சக்கரத்தில் அவரது தலை நசுங்கி அவர் உயிரிழந்தார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புதுச்சேரியில் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்றபோது கால் தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: