மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுங்கையூர் பகுதியில் அதன் தலைமை அலுவலகத்தில், மோடி அரசின் 10 ஆண்டு கால மக்கள் விரோத போக்கை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை செய்து வைத்திருந்தனர்.

மேலும் தமிழ்நாடு சமையல் கலை முன்னேற்ற தொழிலாளர் சங்கம் சார்பில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் உலக வங்கியில் இருந்த கருப்பு பணத்தை மீட்டு எடுப்போம், பெட்ரோல் விலையை குறைப்போம், வேலை வாய்ப்பை உருவாக்குவோம்,

பண மதிப்பீடு ஜி எஸ் டி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பொதுமக்களை மோடி அரசாங்கம் ஏமாற்றியதை விமர்சிக்கும் வகையில் ஒரு ஆள் அதாவது ஐந்தரை அடி உயரத்திற்கு மாதிரி வடை செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முழு ஆதரவு இருக்கும் எனவும் அந்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இனியவன் தெரிவித்துள்ளார்.

The post மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: