×

உத்திரமேரூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி பஜார் வீதியில் உள்ள பழமைவாய்ந்த நடுத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் பால் குட ஊர்வலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு 1008 பெண்கள் தலையில் பால்குடங்களை சுமந்தப்படி மேளம், தாளங்கள், தாரை தப்பட்டை, வாணவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

இதன்பின்னர் மாரியம்மன் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது பக்தர்கள், தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையல் வைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Mariamman Temple ,Uthiramerur ,Sri Mariamman Temple ,Bazaar Road ,Uthiramerur Panchayat ,
× RELATED தவெகவில் இணைந்த...