பழனி : எடப்பாடி பழனிசாமி அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவதில்லைஎன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளார். தினந்தோறும் கட்சியில் இருந்து நிர்வாகிகளை எடப்பாடி நீக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவின் தோல்விகள் குறித்து இதுவரை குழு கூட அமைக்கவில்லை. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும். தோல்விகளை ஆராய்கிறோம் என்ற பெயரில் நிர்வாகிகளிடம் எடப்பாடி வற்புறுத்தி கருத்து கேட்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
