×

தூத்துக்குடி பைபாஸ் சாலையில் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து

* ரூ.பல கோடி மதிப்பில் சேதம்

* 18 மணி நேரம் போராடி அணைப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி சிப்காட் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன. தூத்துக்குடி பைபாஸ் சாலையில், தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பஞ்சு குடோன் இயங்கி வருகிறது.

குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் ரோசரி ஆல்பர்ட் ராயன் என்பவருக்குச் சொந்தமான இந்த குடோனை, புதுக்கோட்டை மறவன்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி (64) என்பவர் மேலாளராக நிர்வகித்து வருகிறார்.

இந்த குடோனில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு குடோனின் உட்பகுதியில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது.

பஞ்சு மூட்டைகள் அதிகளவில் இருந்ததால், தீ குடோன் முழுவதும் அதிவேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து வந்த சிப்காட், தூத்துக்குடி டவுன் மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. குடோனின் கதவுப் பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த மதுரை நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 6,500 பஞ்சு மூட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீயணைப்பு பணியில் 6 தீயணைப்பு வாகனங்களும், 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் நேற்று மா லை வரையில் ஈடுபட்டன. 60க்கும் மேற்பட்ட தீயணை ப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக போ ராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து நடந்த இடத் தை தூத்துக்குடி எஸ்பி சிவபிரசாத் நள்ளிரவு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Tags : Thoothukudi bypass road ,Thoothukudi ,Thoothukudi Chipkot ,road ,
× RELATED மேகதாது விவகாரம் தொடர்பாக...