இடைத்தேர்தலுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்; பிளாக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்பதா?.. தவெகவை விளாசிய சீமான்

 

 

பல்லாவரம்: பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பல்வேறு மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் இணையும் ‘புதிய உறவுகள்’ இணையும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து சீமான் பேசுகையில், முதல்வர் விஜயை தளபதி என்கிறார்கள். தளபதி என்றால் என்ன? எந்த படையின் தளபதி? படை, சொரி, சிரங்கிற்கு தளபதியா?. நடிகருக்கும், தலைவருக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டமாக சிலர் உள்ளனர். பிளக்கில் டிக்கெட் விற்ற கூட்டம் எங்களை திரள்நிதி கூட்டம் என்கிறார்கள்‌.

போதைப்பொருள் விழிப்புணர்வு ஓடி ஒழிக்க கூடாது, தேடி ஒழிக்க வேண்டும். 3 கிமீ ஓடிய ஒரே முதல்வரா. என்னோட ஓட விடுங்கள், நான் 12 கிமீ ஓடுகிறேன். இது எல்லாம் ஒரு பெருமையா. போதைப்பொருளுக்கு வரையறை என்ன முதல்வரே. கஞ்சா, கொக்கைன், மெத்தபெட்டமைனா?, அப்போ மதுக்கடைகளில் விற்கப்படுவது என்ன கரும்புச்சாரா?. மக்கள் காசை வீணடிக்க மாட்டோம் என்கிறீர்கள், ஆனால் ஆங்காங்கே பேருந்து நிலையங்களில் விளம்பர பதாகை வைத்துள்ளீர்கள். இவ்வளவு கோடிகளை செலவழித்து எதற்கு தெருத் தெருவாய் விளம்பரம். விளம்பர அரசுதான். ஒன்லி ரீல்ஸ் தான். கில்லி சரத்துனு ஒரு அமைச்சர். உடல்நிலை சரியில்லாமல் குழந்தையை எதற்கு அழைத்த வந்து கிரிக்கெட் பார்க்க சென்றீர்கள். குழந்தைக்கு கொடுக்கிற மாத்திரைகள் தண்ணீரில் போட்டாலே கரைந்து விடுமே. அதை எதுக்கு நசுக்கினீர்கள். எதற்கு 500 ரூபாய்.

6 மணி நேரம் தான் தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்கிறது. ஆனால் இதற்கு இவ்வளவு மின் கட்டணம் வந்துள்ளது. இன்னும் 6 மாதம் கழித்து யாரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போட்டோம் என்று சொல்ல மாட்டார்கள்.மீன்பிடிக்கச் சென்ற 850 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு ஏதாவது நிதி கொடுக்கப்பட்டுள்ளதா. அரசு பணி கொடுக்கப்பட்டதா? கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தனர். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசுப் பணி கொடுத்தார்களா, இராணுவத்தில் சேர்ந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு உதவித் தொகை, அரசு வேலை வழங்கியிருக்கிறார்களா.முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே, அன்று கரூர் சம்பவம் நடந்த பொழுது நீங்கள் ஒரு நடிகர். பார்க்க வந்த கூட்ட நெரிசல், அது ஒரு விபத்து.

அதற்குக் காரணம் நீங்கள் தான். தற்போது உங்களிடம் தான் எல்லா அதிகாரமும் இருக்கிறதே, விசாரணை குழுவை அமையுங்கள். அன்று என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லுங்கள்.அதை விடுத்து எதற்கு அரசு வேலை வழங்குகிறீர்கள். பம்பரம் சுற்றிக்கொண்டே இருக்கும் போது, அந்த பம்பரத்தை இரண்டாகப் பிளக்க வேண்டும். அது போலத்தான் இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள் என்று நான் காத்துக் கொண்டு இருக்கிறேன். வெறியோடு இருக்கிறேன். 60 நாளுக்குள்ளேயே இப்பொழுது கண்ணு கட்டுகிறது என்று சொல்கிறார்கள். இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ளது. முதலமைச்சர் வருகிறார் என்றால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து எல்லாம் நிறுத்தி விடுகிறார்கள், என்று கூறினார்.

Related Stories: