கோவை: பொள்ளாச்சி – உடுமலைப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், நல்லம்பள்ளி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். நெடுச்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
