ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதல்கள் அதிகரித்து வருவதால், வாரத்திற்குச் சராசரியாக 1 மெட்ரிக் டன் எடையுள்ள விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். கென்யா, அமெரிக்கா, போலந்து எனப் பல நாடுகளில் ராக்கெட் பாகங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், 2035க்குள் உயிரிழப்புகள் நேரிடும் அளவுக்கு ஆபத்து அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
