பெங்களூரு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி அணை நிரம்பும் தருவாயில் இருக்கிறது. கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மைசூரு சென்றுள்ள கர்நாடக முதல்வர் டி.கே.சிவ குமார், “இயற்கை யாருக்கும் சொந்தமானதல்ல. அணை விரைவில் நிரம்பக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது என்றார்.
தண்ணீரை தடுத்து நிறுத்த முயன்றால், நாம் அனைவரும் அடித்துச் செல்லப்படலாம் என்று கர்நாடக முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். எனவே தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படுவதை எதிர்த்து நடத்தப்பட உள்ள பந்த் போராட்டத்தைக் கைவிடுமாறு, பந்த் நடத்த திட்டமிட்டுள்ள அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
