கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட அடூர் மலைப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு, நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.நிலச்சரிவில் வேறுயாரேனும் சிக்கியுள்ளனரா என தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
