குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: 2வது நாளாக குளிக்க தடை

தென்காசி: குற்றாலத்தில் சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க 2 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் பெரும் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு  தண்ணீர் வரப்பு அதிகரித்து பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு மிகபலத்த மழை பெய்ததால் அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவியை பொறுத்தவரை புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலையை தண்டி தண்ணீர் விழுந்து தொட்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்து அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு முழுமையாக குறைந்த பிறகே குளிக்க அனுமதி வழங்கப்படும் அதுவரை தடை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆவலுடன் நீராட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

 

Related Stories: