×

ரூ.2 கோடி வெளிநாட்டு கரன்சிகடத்தி வந்த பயணி கைது

திருச்சி, ஆக.1:மலேசியயாவில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த பயணியிடம் ரூ.2 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு தனியார் விமானத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்ட திருவாடனை பகுதியை சேர்ந்த சுவைபு என்ற பயணி தனது உடமையில் ரூ.2 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுவைபு வை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Trichy ,Central Revenue Intelligence Division ,Trichy International Airport ,Malaysia ,Kuala Lumpur ,Trichy International Airport… ,
× RELATED திருச்சியில் விபச்சாரம் 2 பெண்கள் மீட்பு