சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. அதன்படி, சில விரைவு ரயில்கள் 5.8.2026 முதல் 20.8.2026 வரை சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் அல்லது மாம்பலத்தில் இருந்து புறப்படும் மற்றும் பயணம் அத்துடன் முடித்துக்கொள்ளப்படும். இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 5.8.2026 முதல் 19.8.2026 வரை தஞ்சாவூரிலிருந்து புறப்படும் ரயில் எண்.16866 தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் உழவன் விரைவு ரயில், மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண். 16160 மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் விரைவு ரயில், கொல்லத்திலிருந்து புறப்படும் ரயில் எண். 20636 கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில், சேலத்திலிருந்து புறப்படும் ரயில் எண். 22154 சேலம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோல், 5.8.2026 முதல் 19.8.2026 வரை திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்படும் ரயில் எண். 12654 திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் ராக்போர்ட் விரைவு ரயில், மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும். ரயில் எண் 16865 சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், 2026 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 23 மணிக்கு புறப்படும். ரயில் எண் 16159 சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 2026 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 23.40 மணிக்கு புறப்படும். ரயில் எண் 20635 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 2026 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும்.
இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 20.20 மணிக்கு புறப்படும். ரயில் எண் 12653 சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (2026 ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 20 வரை சென்னை எழும்பூரிலிருந்து பயணத்தை தொடங்கும் ரயில்கள்) தாம்பரத்திலிருந்து புறப்படும். இந்த ரயில் 2026 ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 21 வரை தாம்பரத்திலிருந்து அதிகாலை 00:05 மணிக்கு புறப்படும். மேலும், ஆகஸ்ட் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 09419 அகமதாபாத் – திருச்சிராப்பள்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய நிலையங்களில் நிற்காமல், ரேணிகுண்டா, திருத்தணி, மேல்பாக்கம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.
திருத்தணியில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படும் (வருகை: 13 / புறப்பாடு: 13.05). ஆகஸ்ட் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.45 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 09420 திருச்சிராப்பள்ளி – அகமதாபாத் வாராந்திர விரைவுச் சிறப்பு ரயில், தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர் மற்றும் அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நிற்காமல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மேல்பாக்கம் மற்றும் திருத்தணி வழியாக இயக்கப்படும் வகையில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும். திருத்தணியில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்கப்படும்; அங்கு ரயில் வருகை நேரம் 15.15 மணி, புறப்பாடு நேரம் 15.20 மணி.
