ரூ.1200 கோடி கடன் மோசடி வெளிநாட்டு வங்கியில் ரூ.94 கோடி முடக்கம்

 

புதுடெல்லி: டெல்லி சார்ந்த பாசுமதி அரிசி வர்த்தக நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்கள் மீதான ரூ. 1,200 கோடி கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ‘பேங்க் ஆஃப் சிங்கப்பூரில்’ வைக்கப்பட்டிருந்த 1,00,34,819.01 அமெரிக்க டாலர் (தற்போதைய மாற்று விகிதத்தின்படி சுமார் ரூ. 94.76 கோடி) மதிப்பிலான வங்கி வைப்புத்தொகையை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

டெல்லியில் உள்ள அமிரா பியூர் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவனரும் குற்றம் சாட்டப்பட்டவருமான கரண் சனானாவிடம் இந்தத் தற்காலிக முடக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கரண் சனானா இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரும், அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான அனிதா டைங்கும், தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகளாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தால் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டனர். அமலாக்கத் துறையின் தகவலின்படி, அனிதா டைங் துபாயில் வசித்து வருகிறார்.

Related Stories: