×

BMW நிறுவன அதிரடி: 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

பெர்லின்: 2027ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியில் உள்ள சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகப் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான BMW அறிவித்துள்ளது. சீனாவில் கடும் போட்டி நிலவுவதாலும், மந்தமான பொருளாதாரச் சூழலாலும் இம்முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதையடுத்து மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனாவுடனான கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு போன்றவற்றால் ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக, பிரபல முன்னணி கார் நிறுவனங்களான வோக்ஸ்வேகன், மெர்சிடீஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஊழியர்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

முனிச் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் BMW நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேர் பணிபுரிகின்றனர். தற்போது, நிறுவனத்திற்கும் தொழிலாளர் நலச் சங்கத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவுகளை இலக்காகக் கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உற்பத்திப் பிரிவுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags : BMW ,Germany ,Berlin ,China ,
× RELATED ஆயுதங்களை ஒப்படைக்கிறது ஹமாஸ்...