பெங்களூரு: கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் ஹெச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் சுமார் 2.60 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
