புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் பழுதடைந்த மின்மாற்றி கம்பங்கள் சீரமைப்பு

 

புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் பழுதடைந்து சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து எந்த நேரத்திலும் சரிந்து விழுந்து ஆபத்தை எற்படுத்தும் நிலையில் இருந்த உயர் மின்னழுத்த மின்மாற்றி கம்பங்கள் இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உடனடியாக இதுகுறித்து பழுதடைந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது.புதுக்கோட்டை மாநகராட்சியின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான சாலையாக விளங்குவது சத்தியமூர்த்தி சாலை. புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை இணைக்கும் இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான வாகனங்களும் கடந்து செல்கின்றன. இச்சாலையில், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர்கலைக் கல்லூரி நுழைவு வாயில் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கான்கிரீட் தூண்களின் மீது அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த மின்மாற்றி தற்போது மிகவும் பழுதடைந்துள்ளதாகவம் .

சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளேயிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி, ஆபத்தான முறையில் எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் நிற்கிறது.அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன், மாநகராட்சி நிர்வாகமும் மின்வாரியமும் இணைந்து இந்த அபாயகரமான மின்மாற்றியை உடனடியாக அகற்றி, புதிய மின்மாற்றியை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். இது குறித்து செய்தி தினகரனில் நேற்று முன்தினம் வெளியானது. இதனையடுத்து நேற்று மின்துறையை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு புதிய மின் கம்பங்கள் நட்டு மின்மாற்றியை பொரு்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: